கதைபேசும் விழிகள்
கண்கள் பேசும் என்பதை
மௌனமாக உன்னைப் பார்த்த போது
உணர்ந்து கொண்டேன்
நிமிஷங்கள் வருஷங்களாக
சில நொடிப்பார்வையில்
சிக்கித் தவித்த என் இதயத்தை
சிறைமீட்டுப் போனது
வீதியோர ஜன்னல் காற்று
எங்குமில்லாத ஒரு அமைதியில்
உன்னிடம் அனுமதி கேட்காமலே
பேசி விட்டேன் உன் இதயத்துடன்
காரணம் கூட தெரியாமல்
நானும் காதலித்தேன் உன் பார்வைகளை
கண்களிடம் அனுமதி கேட்டு
கடைசிவரை சேர்ந்திருக்க முயற்சித்தேன்
காரணம் தெரியாமல் யோசித்தேன்
இன்னும் எத்தனை தடவை தான்
உன் நினைவை நேசிப்பேன்
எனக்குள் நானே யாசிக்கிறேன்
பதில்கள் தெரியாமல் யோசிக்கின்றேன்......


0 comments:
Post a Comment